'ரஜப்' என்றொரு பிறை.....
***********************
கஹட்டோவிட்ட ஈன்றெடுத்த முத்தொன்று
காணாமல் போன காதை என்னென்று சொல்வேன்
இவ்வூரில் கால் பதித்த நாள் முதலாய்
கவர்ந் தென்னைக் காதலித்த மாணவனே
############
மர்ஹூம் 'ஸாலிஹ்' மனங்கவர்ந்த தம்பதியின்
மாசில்லா மைந்தனே.... மகனே 'ரஜப்'..
எத்தனை சோதனை எத்தனை வேதனை..!
அத்தனையும் நீ பொறுத்து 'அல்லாஹ்' வின் அருள் பெற்றாய்..!
##############
நித்தமும் பேசிடுவாய் நின் புன்னகையோ ஒரு கவிதை
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் 'சரித்திரம் 'நீ படைத்துவிட்டாய்..!
படிப்பாலே ஓர் இயந்திரன் பண்பாலே ஓர் இந்திரன்..
அன்பாலே எனை ஈர்த்த 'தந்திரன்' நீ மகனே..!
##############
மக்களுக்கு உதவிடும் மகத்தான மனம் கொண்டாய்
இத்தரை மாந்தரின் இரக்கமே பெற்றிட்டாய்
'ஆண்டவன் 'கட்டளை அனுதினம் செய்திட்டாய்
அனைவரின் உள்ளத்தை அன்பாலே வென்றிட்டாய்..!
##############
அவனியில் பிறந்ததை பேறென நினைத்தாய்
பெருமிதம் கொண்டு பிள்ளைகள் பெற்றாய்
உலகில் உதித்து பிறையாய் வளர்ந்தாய்
இன்று தேய்ந்து இல்லாமல் போனாய்...!
#############
உன் அன்பு ஆசான்....
கவிஞர் காவூர் ஜமால்