நாள் சம்பளம் 1000 ரூபாய் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு

zahir
By -
0


பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு ​உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்துள்ளது.

1000 ரூபாய் சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 2021 இல் முதலாளிகள் சம்மேளனம் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, இன்று (09) தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியது.

அத்துடன், நாள் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை 22 கம்பனிகளும் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் 1000 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)