அரசியல் அமைப்பின் 22 ஆம் சட்ட மூலம், இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், கொள்கைப் பிரகடன உரை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது.
