வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புனித மரியாள் கல்லூரி மாணவர்களுக்கு சீருடை தைப்பதற்கு அவசியமான நிதியினை வழங்கிய எனசல்கொல்ல மத்திய கல்லூரி மாணவர்கள்

Rihmy Hakeem
By -
0

 நாவலப்பிட்டிய சாந்த மரியா கல்லூரியில் (புனித மரியாள் கல்லூரியில்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை தைப்பதற்கு அவசியமான ரூ.86,000.00 பணத்தொகையினை, கண்டி  எனசல்கொல்ல மத்திய கல்லூரி மாணவ தலைவர்களால் சான்த மரியா கல்லூரி மாணவ தலைவர்களுக்கு உத்தியோக பூர்வமாக வழங்கும் வைபவம் நேற்று (25) நடைப்பெற்றது. 

அண்மையில் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய சாந்த மரியா கல்லூரி மாணவர்களுக்கு உதவும் நோக்கில், கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களால் 'தேவையுடையவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதன் மூலம் நாளை நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்' என்ற தொனிப்பொருளில் நிதி திரட்டும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

அவ்வாறு திரட்டப்பட்ட நிதியே நேற்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)