தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நேற்று (23) முதல் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள், ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்த பின்னர், இந்த விசேட கருமபீடத்தில் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.