முட்டை இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் உத்தரவு

TestingRikas
By -
0
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கான தேவை வழமையை விட அதிகமாக இருக்கும் என்றும், நாட்டில் போதிய உற்பத்தி இல்லை என்றால், தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அளவு முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் விளக்கினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)