டாக்டர் அப்துல் கலாம் புலமைப்பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம்


( மினுவாங்கொடை நிருபர் )

   அமைச்சர் றிஷாட் பதியுதீன்  அமைப்பின் ஏற்பாட்டில்,  இல்ஹாம் மரிக்காரின்  ஆலோசணையின் பேரில்,   100  மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம்  அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
   நாட்டில் எத்தனையோ திறமையான மாணவர்கள் இருந்தாலும், இவர்களுக்கு  உயர்கல்வியைத்  தொடர்வதற்கு பொருளாதாரம் ஒரு முட்டுக்  கட்டையாக அமைந்து விடுகின்றது.
                                                                                                                            இதனைக் கருத்திற்  கொண்டு,  கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  வழிகாட்டலுக்கு அமைவாக, இத்  திட்டத்தினை   கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அமேசன் உயர்கல்வி நிறுவனதினால்  செயற்படுத்தபடுகின்றது .       

                                                                   இத்திட்டத்தின் மூலமாக  100  மாணவர்களுக்கு இலவசமாக  உயர்கல்வியினைத்  தொடர்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. நாட்டில் எத்தனையோ உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தும்,  இப்படியான வறிய மாணவர்களைக்  கண்டு கொள்வதில்லை.எனவே,  இவ்வாறான மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத் வதுடன், ஏனைய  உயர்கல்வி  நிறுவனங்களுக்கும் ஒரு  முன்னோடியாகவும் இருப்பதில் பெருமிதம் அடைவதாக,  நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம்  மரைக்கார் உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.

   இந் நிகழ்வானது,  தெஹிவளை எஸ்.டி.எஸ்.
ஜயசிங்க மண்டபத்தில், அண்மையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக,   மேல் மாகாண ஆளுநர்  ஆஸாத் சாலி , விசேட அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், மேல் மாகாண சபை உறுப்பினர்  எம். பாயிஸ், சிறப்பு விருந்தினர்களாக அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் ஆலோசகர் உல்ரிக்கா, சட்டத்துறை விவுரையாளர் சட்டத்தரணி சர்டீன், மருத்துவத் துறை கல்வி ஆலோசகர் பைசீன் சுபைர், மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் எப்.எம். ஷரீக்,  கொழும்புப்  பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அஸீஸ், வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ரூமி, வெஸ்டர்ன் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஸியாத்,  படைத்துறை பணித்தலைவர்  முஹம்மத்,  பேருவளை மாநகர சபை உறுப்பினர்களானா கசீப் மரைக்கார்,  முஹம்மட் இஷாம், ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் மொஹமட் ரியாஸ் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

இத்திட்டத்தை,  மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.  இத்திட்டமானது,  இந்தியாவின்  முன்னாள்  ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நினைவாக,  இல்ஹாம் மரைக்காரின் ஆலோசணையின் பேரில்,  அமேசன் உயர்கல்வி நிறுவனத்தினூடாக அமுல் படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.            

   தகுதியான மாணவர்கள்,  இப்புலமைப்  பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்களின் பெயர்கள்,  பாடநெறியின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை, 076 520 4604, 076 520 4605 ஆகிய  இலக்கங்களுக்கு குறுந்தகவல் மூலமோ அல்லது வட்ஸ்அப் மூலமோ அனுப்ப முடியும். 

 ஒருவர் ஒரு பாடநெறிக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
 Certificate  in Counselling&Psychology, 
Child Psychology, Teacher Training, Business Management, Spoken English, AMI, Marketing Management, Accounting, Islamic Banking ஆகிய பாடநெறிகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. 

இப் பாடநெறிகளின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுமென, கல்விநிலையப் பதிவாளர் சில்மியா யூசுப் தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.