யொவுன் புரய - 2019 இனை முன்னிட்டு நன்னீர் மீன் பிடித்துறையில் அதிக கேள்வியுள்ளதும், பெறுமதி வாய்ந்ததுமான 90,000 மீன் குஞ்சுகள் வீரவிலை ஹம்பாந்தோட்டை, வீரவில ஏரியில் விடப்பட்டன.

யொவுன் புரய 2019 இனை முன்னிட்டு ஹம்பாந்தோட்ட, வீரவில ஏரியில் மீன் குஞ்சுகள் இடும் நிகழ்வு நேற்றைய தினம் (30) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தலைமையில் நடைபெற்றது. 

நன்னீர் மீனவர்களை பலப்படுத்தும் துரிதமான வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு வீரவில ஏரியில் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக இடப்பட்டன.

இவ்வாறு விடப்பட்ட மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை 90,000 இற்கும் அதிகமாகும். இதன் மூலம் நன்னீர் மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடியதாக இருக்கும். 

ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.