கண்கலங்க வைத்த Samuel Sen உடைய பதிவு:
#NewZealand:  மனிதம் இன்னும் மரிக்கவில்லை.
- ஸீ.எம்.எம்.ஸுபைர்
————————————————————
நான் பொதுவாக FB யில் இடுகையிடுவது குறைவு. ஆனால் இன்று எனக்கு இதனை பகிர வேண்டும் போல் இருந்தது.
இன்று எனது மகன் DARSH இன் 9 வது பிறந்த நாள்.

அவர் ஒரு மடிக்கணினி (Laptop) வாங்கித்தருமாறு நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். இன்று அவரது பிறந்த நாள் என்ற படியால் அவர் ஆசையோடு கேட்ட Laptop ஐ அவரது பிறந்த நாள் பரிசாக வாங்கிக் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்த  நினைத்து அது பற்றி அவரிடம் நான் கேட்ட போது அவரளித்த பதிலை இன்னும் எனக்கு நம்பவே முடியாமலிருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது.

நான் அவரை கேட்டேன், "இன்று உங்கள் பிறந்த நாள் உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" அதற்கவர் "மலர்கள்"  என்றார். நான் குழப்பிப் போய் விட்டேன். "ஏன் மலர்கள்" என்று கேட்டேன். அதற்கவர், "நான் அவற்றை பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்று, கிறிஸ்ட்சர்ச்சில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு என் மரியாதையை செலுத்தப்போகிறேன்" என்றார்.

நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன், என்ன சொல்ல என்று தெரியவில்லை. சிறிய மௌனத்தின் பிறகு நான் "நீங்கள் நீண்ட காலமாக விரும்பிக் கேட்ட லேப்டோப் " என்று கேட்டேன். "டெடா நீங்கள் அந்த பணத்தை கிறிஸ்ட்சர்ச்சில் அதிகம் தேவையுடையோருக்கு நன்கொடையாக கொடுத்து விடுங்கள், நான் இப்போதைக்கு உங்கள் லேப்டாப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்" என்றார்.

I normally don’t post but I had to today.
HAPPY 9th BIRTHDAY DARSH
I was going to surprise him with a gift which he wanted for his birthday which was a laptop but he surprised me.I asked him today while going to buy it I asked him “What do you want for your birthday” he said “flowers” I was amused and confused why flowers. So I asked him “why flowers” he replied “because I want to take it to the mosque and pay my respects to the people who died in christchurch” I was shocked and surprised and didn’t know what to say. After moment of silence I asked him “what about the laptop you wanted for so long” he said “Dadda you can donate that money to people who needs it more in christchurch, they need it more and I can use your laptop for now”





(CMM Zubair)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.