2022ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறதென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கமைய தேசிய கல்வி நிறுவனங்களில் சாதாரணத் தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்மூலம் பாடசாலை மாணவர்களும் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.
(TamilMirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.