2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.00 மணிக்கு பின்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இதனைப் பார்வையிட முடியும்.

2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது.
அதில், 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.