எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இம்மாதம் 08ம் திகதி முதல் விஷேட பஸ் போக்குவரத்து சேவையை மேற்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

எதிர்வரும் 18ம் திகதி வரை இந்த விஷேட சேவை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கால அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்‌ஷ கூறினார். 

பண்டிகை காலத்தில் ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலனுக்காக 1487 மேலதிக பஸ்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார். 

கொழும்பு, ஹட்டன், கண்டி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு அதிக அவதானம் செலுத்தி இந்த சேவையை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். 

இது தவிர தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதியிலும் குறித்த காலத்தில் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக அவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.