ஆச்சரியமூட்டும் படிப்பினை
————————————

“நிறைய பேர் எங்களுக்கு பண உதவி செய்தார்கள். நாங்கள் சேகரித்த சீட்டுப் பணம்,மகளின் நகைகள்,மருமகனின் சம்பள பணம் இனவாதிகள் கொள்ளையிட்டு சென்றதனால், கிடைத்த பணம் அனைத்தையும் கொடுக்க வேண்டிய சீட்டுக்குரியவருக்கு கொடுத்து எங்களுடைய கடனை தீர்த்துக் கொண்டோம். கடன் தானே மகன்; அதனை முதலில் கொடுத்து விட வேண்டும் தானே.”

மகனின் சம்பளப்பணத்தோடு சேர்த்து இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம், மகளின் 8 பவுண் நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தாய் சொன்ன வார்த்தைகளே இவை. அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றுவதில் கஷ்டத்தை எதிர் நோக்கும் போதும், கடனோடு வாழக் கூடாது, கடனோடு மரணித்து விடக் கூடாது என்ற அந்தப் பெண்ணின் எண்ணத்தைக் கண்டவர்களின் திகைப்பு இன்னும் நீங்கவில்லை.

நான் நேற்று,#தும்மோதரை ல் கேட்ட சம்பவம்!

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால்பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

(அஸீம் ஜௌபர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.