கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பது சம்பந்தமாக இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபரான மொஹமட் சிபானை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 04ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். 

கொழும்பு சங்கரீலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்துல் மஜீட் மொஹமட் நியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது சம்பந்தமாக இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டது. 

ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் ​சேர்ந்த 26 வயதுடைய மொஹமட் சிபான் என்ற நபரே இலஞ்சம் வழங்க முற்பட்டு கைது செய்யப்பட்டதுடன், 05 இலட்சம் ரூபா பணத்தை ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சமாக கொடுக்க முயற்சித்துள்ளார்.

(அத தெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.