2012 இல் A/L எழுதி ரிசல்ட் வந்த நாளிலே இருந்து பலரும் சொல்லும் ஒரு வசனம்.... எனக்கு மட்டுமல்ல.... கெம்பஸ் போன எல்லோரும் கேட்கும் ஒரு வசனம் தான்... இது சாதாரணமாய் சொல்லும் ஒரு வசனமாய் இருப்பதில்லை எப்போதும்.... அதை சொல்லும் தொனியில் மகிழ்ச்சி😊, ஏமாற்றம்😏, பொறாமை😡 என்று பல உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும்....

ஆனால் எல்லோரும் நினைப்பது போல கெம்பஸ் போனவுடன் ஒருவரது வாழ்க்கை பூரணமாகி விடுவதில்லை....
வாழ்க்கையின் போராட்டமே அதன் பின்னர் தொடங்குகிறது.... வெளிநாடு சென்று போராடும் ஒரு இளைஞனின் போராட்டத்துக்கு சற்றும் குறைவில்லாத ஒரு போராட்டம் இங்கும் இருக்கிறது...😔
ஒழுங்கான சாப்பாடு கிடைப்பதில்லை...

💔
ஊருக்கு போக லீவு கிடைப்பதில்லை...💔
பெருநாளைக்கு கூட லீவு ஒழுங்காய் கிடைப்பதில்லை....💔
உடன் பிறப்புகளினதும் நண்பர்களினதும் எத்தனையோ விசேஷங்களில் கலந்து கொள்ள முடிவதில்லை....💔
எத்தனையோ ஜனாஸாக்களில் கலந்து கொள்ள முடிவதில்லை....💔
எல்லாவற்றுக்கும் மேலே 25 26 27 28 வயதுகளில் கூட பெற்றோரின் தயவில் அவர்களது உழைப்பிலே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.... ஆயிரம் கனவுகள் இருந்தும் எதுவுமே செய்து கொள்ள முடியாத நிலைமை...

  Exams, assignment, presentation, Osce, Viva என்று ஆயிரம் சிக்கல்கள்.... இவை அனைத்தையும் தாண்டி வந்தாலும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை எடுப்பதில் சிக்கல்.... உரிய வயதில் திருமணம் செய்வதில் சிக்கல்... குடும்பத்துக்கு கடமைகள் செய்வதில் சிக்கல்...... இப்படி பல ஆயிரம் சிக்கல்களுக்கு மத்தியில், கெம்பஸ் வாழ்க்கையை அனுபவிக்கும் ஜீவன்களை பார்த்து, இந்த சமூகம் ஒற்றை வார்த்தையில் கூறி விடும்,,,,,😥😥

#உனக்கென்னப்பா_கெம்பஸ்_போயிட்டே

(Ayas Ahmed)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.