மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ....

புல்மோட்டை  பிரதேசத்தில் புனித பூமிக்கு காணி அபகரிக்கும் திட்டம் மீள ஆரம்பம்
************************************************************
குச்சவெளி பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட

01. ஸ்ரீ சந்தர்வ யுக்திக வன செனசுன - புல்மோட்டை -01  50 ஏக்கர் காணி

02. யான் ஓயா ராஜமஹா விகாரை  - புல்மோட்டை -01   50 ஏக்கர் காணி

03. எனா நெகி கந்த ரஜ மகா விகாரை  -புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி

04. மிகுந்து லென பிராண ரஜமகா விகாரை -புல்மோட்டை-01 50 ஏக்கர் காணி

05. சாந்தி விகாரை    -புல்மோட்டை -04 50 ஏக்கர் காணி

06. நாகலென புராண ரஜ மகா விகாரை -புல்மோட்டை 03 50 ஏக்கர் காணி

07. படரகள ஆரண்ய சேனா சனய -கும்புறுபிட்டி கிழக்கு  - 50 ஏக்கர் காணி

08. சப்தனாக பப்பதை வன சென  -திரியாய் 50 ஏக்கர் காணி

09. பாகிய பப்பன வன சென சுன -கும்புறுபிட்டி கிழக்கு  50 ஏக்கர் காணி

10.தெபரகல பிராண வன செனசுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர்  காணி

போன்ற பகுதிகளில் அண்மையில் நிறுவப்பட்ட பௌத்த விகாரை அண்டிய எமது பிரதேசத்திலுள்ள வயல் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அபகரிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

ஏலவே குறித்த பகுதியில் சுமார் 2000 க்கு மேற்பட்ட காணிகளை புனித பூமிக்கு அளவிட முற்பட்டவேளை பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தியமை கடந்த 2010 ம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்ட அதேவேளை மீண்டும் 2019 ஆண்டில் குறித்த பிரதேச மதகுரு ஒருவரினால் தொடர்ந்தும் குறித்த நடவடிக்கை எடுக்கும்படி குச்சவெளி பிரதேச செயலகத்தில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மீண்டும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன

மேற்குறிப்பிடப்பட்ட அளவு திட்டத்தின்படி புல்மோட்டை பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 300 ஏக்கர் பிரதேச மக்களின் வயல் காணிகள் புனித பூமி என்ற போர்வையில் அபகரிக்கப்டும் நிலைமை

அரிசிமலை பகுதியில் பொதுமக்களால் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்குள் செல்ல முடியாத நிலையில் ஏனைய பகுதிகளை குறிவைத்து மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது 
இதுவிடயமாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களூடாக 27(புதன்) அரசாங்க அதிபரை நேரில் சென்று சந்தித்து விடயமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அன்வர்,
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.