அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களை மீள் திருத்தம் செய்வது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்;ளது.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவாகும் பண செலவை குறைத்து அதற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
(அததெரண)
கருத்துரையிடுக