பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று (04) பிற்பகல் 3.00 மணியளவில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதன்போது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறித்த அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.