மதுபோதையில் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கறைப்பற்று வரை பயணிக்கும்  இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவால் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சாரதி நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொலிஸ், பொலிஸ் விசேடப் படையணிக்கு கிடைத்த தகவலுக்கமைய,  இராணுவத்தினரின் உதவியுடன் யாழ் நாவக்குழி பிரதேசத்தில் வைத்து பஸ் சோதனையிடப்பட்டதுடன், இதன்போது சாரதி மது​போதையில் இருந்துள்ளதுடன் அவரது போக்குவரத்து பையில் சாராயம், பியர் என்பன இருந்துள்ளன.


தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.