இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்து.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 34 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக சர்துல் தாகூர் 3 விக்கெட்களையும், நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

இதன்படி இந்தியா அணிக்கு 143 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.