குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு
செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு
அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாம்
அறிகிறோம். குறித்த பதிவுகளுக்கு இராணுவத்தைப்
பயன்படுத்துவதனூடாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்த வேண்டாமென
கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்
ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றத்தை
பிரதிநிதித்துவப்படுத்தி 19 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்ற
நிலையில் பிரதமர் தனித்து சுயாதீனமாக செயற்படாது மக்கள்
பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தி ஆலோசனை பெற்று செயற்பட வேண்டுமெனக்
கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி
அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர் முஸ்லிம் சமய விவகார அமைச்சராகப்
பதவிவகித்த ஹலீமின் முகாமைத்துவத்தின் கீழ் நாட்டிலுள்ள
பெரும்பாலான குர்ஆன் மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் பதிவு
செய்யப்பட்டுள்ளன. எனினும், புதிதாக மீண்டும் பதிவு நடவடிக்கைகளை
ஏன் மேற்கொள்ள வேண்டுமென்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி
எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் கலாசார
அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015 க்கு முன்னர் மத்ரஸாக்கள் பதிவு
செய்தல் மற்றும் அரபுக் கலாசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள்
தடைப்பட்டிருந்தன. அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக்
குறிப்பிடலாம். எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்
ஹலீமின் முயற்சியினால் பெரும்பாலான மத்ரஸாக்களின் பதிவுகள்
இடம்பெற்றன. இருந்தபோதிலும் இன்னும் பதிவுசெய்யப்படாத
மத்ரஸாக்கள் இருப்பின் அவற்றை பதிவுசெய்து கொள்வதற்கான கால
அவகாசத்தை அரசாங்கத்தால் வழங்க முடியும். இதனை தவிர்த்து அனைத்து
மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளையும் மீண்டும் பதிவு செய்ய
நடவடிக்கை எடுத்திருப்பது வீணான கால விரயத்தையே ஏற்படுத்தும்.
அத்தோடு, அரசுக்கு மேலும் செலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக
அமையும். எனவே, கடந்தகாலப் பதிவுகளை பேணுவது சிறப்பானதாக அமையும்.
இதுதவிர, தற்போது மத்ரஸாக்களை பதிவு செய்யும்
நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர்
நியமிக்கப்பட்டிருக்கிறா ர். இது முஸ்விம் மக்களை
அச்சுறுத்தும் செயற்பாடாகும். மத்ரஸா பதிவு நடவடிக்கைகள் முஸ்லிம்
சமய கலாசார திணைக்களத்தின் ஊடாக கலாசார அமைச்சினாலேயே
மேற்கொள்ளப்பட வேண்டும். இதை தவிர்த்து இராணுவத்தை பயன்படுத்துவது
பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
கருத்துரையிடுக