கட்டுநாயக்க ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் பணியாற்றுவோரில் இதுவரையில் வீடு திரும்ப முடியாமல் இருந்தவர்களை தமது வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது.
விடுதிகளில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த ஏற்பாடு குறித்து கடுநாநாயக்க பொலிசார் நேற்று இரவு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி அறிவித்தனர்.
இதனையடுத்து கட்டுநாயக்க ஏற்றுமதி தயாரிப்பு வலயத்திற்குள் பணியாற்றுவோரில் பலர் தமது வீடுகளுக்கு செல்வதற்காக இன்று அதிகாலை வந்திருந்தனர் .

(அரசாங்க தகவல் திணைக்களம்)