இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலமையின் அடிப்படையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமையில் செயல்படும் போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் உடனடியாக குறைகளை போக்கி நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பொறிமுறையின் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்னவெனில் நாளாந்தம் பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கை தடைப்படாது வழமை போன்று முன்னெடுப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிரமங்களை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும்.
இதற்கமைவாக நாளாந்தம் பொதுமக்களின் வாழ்க்கையில்; எதிர்கொள்ளப்படும் சிரமங்களுக்கு தேவையான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக கீழ்கண்ட எத்தகைய தொலைபேசி இலக்கத்தினுடாகவும் தமது பிரச்சினைகளை முன்வைக்குமாறு அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு பொதுமக்களுக்கு தயவுடன் அறிவித்துக்கொள்கின்றது.
தொலைபேசி இலக்கங்கள்
076 0390 981          071 250 0031
076 0390 437          076 652 8068
076 6527 589          076 039 0564
076 0390 732          076 039 1461
076 0390 563          076 039 0752
076 0390 754
 (அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.