வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லொறியில் இருந்து இன்று (27) கஞ்சா மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் சாஜன் எம்.வி.எம்.தாஹா தலைமையில் சென்ற குழுவினரால் நாவலடி இராணுவத்தினரின் உதவியுடன் கொழும்பில் இருந்து காத்தான்குடி பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வந்த லொறியில் இருந்து குறித்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில்15 கிராம் ஐஸ் போதைப் பொருளும், 7 கிராம் கஞ்சா, 200 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஏற்றி வந்த வாகனம் மற்றும் 3 கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து காத்தான்குடி பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லொறியானது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வருவதற்கு அனுமதி பெறப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.