உலகமெங்கும் அச்சுறுத்தும் கொரோனா

⭐ கொரோனா எனும் பெயரில் உயிர்களை போக்கிட வந்தாயே !

⭐ சின்னஞ்சிறு குழந்தை முதல் தள்ளாடும் முதியோர் வரை உன்னை கண்டு விரண்டோடுகின்றனர் கொரோனாவே !

⭐பள்ளி சென்று பாடம் படித்திட முடியாத நிலை
பாதையில் நிம்மதியின்றி செல்லும் நிலை

⭐ நாம் செய்யும் பாவம் போக்கி பரிசுத்தம் தந்திட வந்தாயா ?

⭐நம் உயிர்களை போக்கி இப்பிரபஞ்சத்தை அளித்திட வந்தாயா ?
கொரோனாவே !

⭐ ஒவ்வொரு வினாடியையும் உன்னை கண்டு அச்சத்துடன் வாழ்கிறோம் கொரோனாவே !

⭐இந்நொடியே நீ சென்றிடு !
இன்பமாய் எம்மை வாழவிடு !
அன்பாய் வேண்டிக்கொள்கிறேன் கொரோனாவே !

🖋️பாத்திமா ஷர்மிலா முஹம்மது நூஃமான் கஹட்டோவிட்ட - ஆலிமா முஅஸ்கரிய்யா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.