இலங்கையில் நேற்று (28) புதிததாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்களுள் நான்கு பேர் இந்தியாவிலிருந்து அண்மைக் காலத்தில் நாட்டுக்குள் வந்தவர்களாவர்.

இதனால் இக்காலப்பகுதியில் இந்தியாவிலருந்து நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாக அடையாளம் காணுமாறு இலங்கையின் மத்திய சுகாதார அமைச்சு அறிவுறத்தியுள்ளது.

எனவே கடந்த 14.03.2020 திகதி அல்லது அதன்பின் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அனைவரும் உடனடியாக 021 221 7278 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

மேலும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக தம்மைத் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதுடன் காய்ச்சல், தொண்டை நோ மற்றும் வரட்டு இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.