எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அதுரலிய ரத்ன தேரோ உட்பட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரோ உள்ளிட்ட குழுவின் “அபே ஜனபல பக்‌ஷய” எனும் புதிய கட்சியில் தேர்தலில் குதிக்கின்றனர்.

இதன்படி ஞானசார தேரோ குருநாகலிலும், அதுரலிய ரத்ன தேரோ கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஜீவன் குமாரதுங்க மற்றும் சோலங்க ஆராச்சி ஆகியோரும் மேற்படி தேரர்கள் அணியில் போட்டியிடுகின்றனர்.

(Utvlanka)




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.