கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென மறுசீரமைக்கப்படும் முல்லேரியா வைத்தியசாலையின் மறுசீரமைப்பு நடவடிக்கையை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் - 19 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் - 19 வெளியீடு
ஊடக அறிக்கை இலக்கம்: 05.2020
வெளியிடப்பட்ட நேரம் 18.30
பணிப்பாளர் நாயகம்
அரசாங்க தகவல் திணைக்களம்
நாரென்பிட்டி
கொழும்பு 5 2020.03.21

ஊடக விளம்பரத்தைப் பெற்றுக்கொள்ளல்
2020 மார்ச் மாதம் 21ம் திகதிக்கு அமைவாக கீழ்கண்ட தகவல்களை ஊடக அறிக்கையாக பொதுமக்களுக்கு வெளியிடுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

1. கௌரவ சுகாதார அமைச்சர் அவர்கள் தெரிவித்த வகையில் இலங்கையில் மேலும் கொவிட் -19 தொற்றுக்குள்ளான நோயாளர்கள் 07 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அதற்கமைவாக மொத்த கொவிட் - 19 நோயிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77ஆகும். இவர்களுள் 48 பேர் இந்துராம வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு வருகை தந்த நபர்களாவதுடன், 17பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்களுடன் நெருக்கமாக தொடர்புகொண்ட நபர்கள் ஆவர். எஞ்சியோருக்கு நோய் ஏற்பட்ட முறை குறித்த விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்கு மேலாக சுமார் 10, 000 பேர் சுகாதார பிரிவு இராணுவம், புலனாய்வு பிரிவு பொலிஸ் மற்றும் பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களினால் அடையாளங் காணப்பட்டு சுயமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடைபிடித்து செயல்படுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
2. சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்த படி இன்றைய தினம் தொடக்கம் IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக கிழக்கு கொழும்பு முல்லேரியா வைத்தியசாலை, இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விசேட வைத்தியர்களின் சிபார்க்கு அமைவாக கொவிட் 19 நோய் தொற்று உள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை கொவிட் 19 நோய்தொற்று என்று சந்தேகிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக டி சொய்சா வைத்தியசாலை மற்றும் காசல் வீதி மகளிர் வைத்தியசாலை விசேட வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் , ஹோமாகம அடிப்படை வைத்தியசாலை கொவிட்; -19 சந்தேகத்திற்குரிய நபர்களின் சிகிச்சைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் , வொய்ஸ் ஒப் அமெரிக்கா கட்டிடத் தொகுதி இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நவீனமயப்படுத்தப்பட்டு கொவிட் -19 வைரசு தொற்றுக்குள்ளானவருக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றது. இதே போன்று வெரஹெரயில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 30 கட்டில்களுடன் சிகிச்சைப் பிரிவொன்று ஏற்பாடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3. தற்பொழுது இலங்கையில் 22 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3063. அத்தோடு இவர்களுள் 31 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
4. தற்பொழுது கொவிட் - 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்கள் 77 ஆவதுடன் இவர்களுள் 69 பேர் IDH வைத்தியசாலையிலும் 04 பேர் அனுராதபுரம் பெரிய ஆஸ்பத்திரியிலும் 03 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.
5. 2020 மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 10.30 இற்கு ருடு 196 இலக்க விமானத்தில் இந்தியாவில் புதுடில்லி நகரத்தில் இருந்து வந்த 172 விமானப் பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இரணைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கும் 41 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

6. அவசரகால சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் அத்தியாவசிய விடயங்கள் தவிர வீடுகளிலிருந்து வெளியேறாமல் வீட்டுக்குள் தங்கியிருந்து இந்த தொற்று நிலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
எம்.பி. டப்ளியு டப்ளியு டப்ளியு எம் சி பீ விக்கிரமசிங்க ஆர் டப்ளியு பீ ஆர் எஸ் பி பிரிகேடியர்
இராணுவ ஊடகப் பேச்சாளர்
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.