உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. தமிழகத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளை மூடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 990 திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.
இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி சீரியல் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்புகிறார்கள்.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். இதனால் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்று தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறினார். இந்த நிலை அடுத்த மாதமும் நீடித்தால் இந்த இழப்பு அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
(KISU)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.