ஏ.அகீல் சிஹாப்
கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்காக நாட்டில் பல பாகங்களிலும் ஏராளமான செல்வந்தர்கள் ஏழை மக்களுக்கு பல உதவிகளை புரிந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் வடக்கில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை தானமாக வழங்கியுள்ளனர்.
கருத்துரையிடுக