மீன்கள்

பல தசாப்த காலங்களாக பெருங்கடல்களை குப்பைகளை கொட்டும் இடமாக மனிதர்கள் பாவித்து வந்தாலும், பெருங்கடல்கள் விரைவில் தங்களை மீட்டெடுக்கும் ஆற்றல் கொண்டவை என புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மூன்று தசாப்தங்களில் பெருங்கடல்களை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று நம்புகின்றனர் விஞ்ஞானிகள். காலநிலை மாற்றமும் தற்போது உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மதிப்பிடுவதும்தான் கடலை முழுமையாக மீட்டெடுப்பதில் உள்ள பெரிய சவால் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பல நூறு ஆண்டு காலமாகவே கடல் மனிதர்களால் மாசு அடைந்து வருகிறது. ஆனால் மனிதர்களால் கடல் மாசடைந்து வருகிறது என்பதை கடந்த 50 ஆண்டுகளில் தான் நாம் உணர்ந்துள்ளோம்.
மீன் மற்றும் பல கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவது மற்றும் பல வகையான மாசுபாட்டால் கடலில் ஒருவித நச்சுத் தன்மை கலந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.
கடந்த சில தசாப்தங்களாக, காலநிலை மாற்றத்தின் விளைவாக பவளப்பாறைகளின் தன்மை மாறிவருகின்றன. கடலிலும் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடிகிறது. இந்த தகவல் கடந்த ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் சிறப்பு அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆய்வுகள் தற்போது நிலவும் பிரச்சனைகள் குறித்து கூறுகின்றன இருப்பினும் கடல்கள் தங்களை குறிப்பிட தகுந்த அளவில் மீட்டெடுத்திருக்கின்றன.
சில திமிங்கலங்களை வர்த்தக ரீதியாக வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அழிவு நிலையில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டு 18சதவீதமாக இருந்தது அதுவே 2019ஆம் ஆண்டு 11.4 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறது பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழு
செளதி அரேபியாவை சேர்ந்த கடல் அறிவியலாளர் பேராசிரியர் கார்லோஸ் கூறுகையில், ''கடல் வாழ் உயிரினங்கள், அவற்றை சார்ந்து வாழும் மக்கள் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலை மேம்படுத்த கடந்த கால பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறோம். எனவே ஆதாரங்களுடன் தீர்வு காண முடியும். உலகளவில் ஆதாரங்களுடன் கூடிய பாதுகாப்பு பரிந்துரைகளை வழங்க முடியும்''. என்கிறார்.


"கடல் வளத்தை மீண்டும் கட்டியெழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் மூன்று தசாப்தங்களுக்குள் இந்த இலக்கை அடைய முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்'' என்றார். 

bbc 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.