இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

அவர்களில் 5 பேர், கொழும்பு - 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என்றும் மற்றுமொருவர் வரக்காப்பொலை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 310 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே இரத்தினபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்தி பிழையாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.