பொலனறுவை வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி நாட்டில் இதுவரை 322 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. .

இதேவேளை, இன்றைய தினம் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி இதுவரை 104 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

தற்போது 211 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 100 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.