ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளிடம் இருந்து தாயை பிரித்த கொரோனா! பிரித்தானியாவில் சோகம்

Rihmy Hakeem
By -
0


பிரித்தானியாவில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

அந்த குழந்தைகளுக்கு 13 வயதே ஆகியுள்ள நிலையில், அவர்களை விட்டுப்பிரிய வேண்டிய நிலை இவருக்கு எற்பட்டுள்ளது.

Shabnum Sadiq (39) பிரித்தானியாவின் Slough பகுதியில் லேபர் கட்சி சார்பில் கவுன்சிலராக பணியாற்றி வந்தார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக Shabnum பாகிஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

24 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க திணறிவந்த நிலையில், திங்களன்று அவர் உயிரிழந்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, Shabnum ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அவர்களுக்கு இப்போது 13 வயது ஆகும் நிலையில், இந்த இரக்கமற்ற கொரோனா, தாயையும் பிள்ளைகளையும் பிரித்துவிட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)