இன்று மாலை (15) கொழும்பில் இருந்து சாம்பூர் தனிமைப்படுத்தும் முகாமுக்கு சென்று கொண்டிருந்த 2 பஸ் வண்டிகள் வரக்காப்பொல நகரில் வைத்து லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்வத்தில் ஒருவர் (லொறி சாரதி) பலியானதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன் போது தனிமைப்படுத்தலுக்காக சாம்பூர் நோக்கி குறித்த பஸ்ஸில் பயணித்த ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Update
தப்பிச் சென்ற நபர் பிடிபட்டுள்ளதாக சற்று முன் வரக்காபொலை பிரதேச சபை தலைவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக