கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது சமூக மட்டத்தில் அதிகரித்தாலும், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென தாம் நம்புவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும், கூடுதலாக அடையாளம் காணப்பட்ட பேருவளை, அக்குறணை, அட்டுளுகம, யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, இரத்தினபுரி பகுதிகளில் தொற்று குறைந்துள்ளதுடன், இப்பிரதேசங்களில் நோயாளிகள் தற்போது அடையாளம் காணப்படும் எண்ணிக்கை வெகுவாக  குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.