நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.
மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன. இவர்கள் தலைமைத்துவத்துக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகின்றனர் என ஃபோர்ப்ஸில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது.
இந்த பதட்டமான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டுமென உலகிற்கு எடுத்துகாட்டும் விதமாக இந்த பெண் தலைவர்கள் உள்ளனர் என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று சூழலை மிக சிறப்பாக கடந்து வரும் தலைவர்களாக இந்தப் பெண்கள் உள்ளனர். ஆனால் பெண்களால் உலகில் உள்ள ஏழு நாடுகள் மட்டுமே ஆட்சி செய்யப்படுகிறது என்ற விமர்சனங்களும் இருக்கிறது. சரி. பெண் தலைவர்களை வெற்றி பெறச் செய்வது எது?
முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கை
நாட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார் ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் கேத்ரின் ஜேக்கோப்ஸ்டோடிர். ஐஸ்லாந்தின் மக்கள் தொகை 3,60,000 என்றாலும் கூட முதல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படும் முன்பே 20 பேருக்கு மேற்பட்டோர் கூட அந்நாடு தடை விதித்தது. இந்த முடிவு ஜனவரி மாத இறுதியில் எடுக்கப்பட்டது.
ஏப்ரல் 20 வரை, அங்கு ஒன்பது பேர் மட்டுமே கோவிட்-19ஆல் உயிரிழந்துள்ளனர்.
எல்லை, போக்குவரத்து, வர்த்தம் என அனைத்து வகையிலும் சீனாவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் நாடு தைவான். கொரோனாவை கட்டுப்படுத்த முன்கூட்டியே திட்டமிட்ட தைவானின் அதிபர் சை இங்வென் உடனடியாக தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் மையம் ஒன்றை அமைத்து வைரஸ் இருப்பவர்களை கண்டறிய உத்தரவிட்டார்.

Image captio

பின்னர் பாதுகாப்பு உடை மற்றும் கருவிகளை தயாரிக்க தொடங்கியது அந்நாடு. 2 கோடியே 40 லட்ச மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் இதுவரை அங்கு கொரோனா தொற்றால் ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கோவிட்-19ஐ எதிர்கொள்ள ஒரு கடினமான முடிவை எடுத்தார். வைரஸ் தொற்றை கட்டுப்பத்தினால் போதாது, அதனை வராமல் தடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தபோதே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஏப்ரல் 20ஆம் வரை அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 மட்டுமே.
இந்த நாடுகள் அனைத்தும் பெண்களால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதை தாண்டி இந்த நாடுகளிடையே மற்றுமொரு ஒற்றுமை இருக்கிறது. இந்த அனைத்து நாடுகளும் பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகள். நலத்திட்டங்கள் அதிகம் இருக்கக்கூடிய சமூக வளர்ச்சிக்கு அடையாளமாக இருக்கக்கூடிய நாடுகள்.
இந்த நாடுகளில் மருத்துவத்துறை மிகவும் வலிமைமிக்கதாகவும் இது போன்ற ஆபத்தை எதிர்கொள்ள திறன் இருக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

தலைமை பண்பு

தலைமை செய்யும் விதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. ஆனால் முடிவு என்ற ஒன்று எடுக்கப்படும்போது அந்த அதில் பல்வேறு விஷயங்கள் மாறுபடும் என்கிறார் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் பெண்கள் மற்றும் வயதானோர்களுக்கான 3D நிகழ்ச்சியின் செயல்பாட்டு இயக்குநர் கீதா ராவ் குப்தா.
(BBC)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.