கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக கூறி, இஸ்லாமிய பெண்ணொருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்காக வேதனையடைவதாகவும், முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத பாரபட்சத்தைக் கண்டிப்பதாகவும்  முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் தன்னுடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனோ, “கொரோனாவினால் மரணிக்காத, கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கை தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையனாக வேதனையடைகிறேன். முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தை கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக நிற்கிறேன்” எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.