நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1877 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (11) 8 பேர் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரையான காலப்பகுதியில் 80 பேர் மாத்திரமே தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
வைரஸ் தொற்றிலிருந்து 1150 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 716 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தமிழ் மிரர்
கருத்துரையிடுக