இலங்கையில் இன்றைய தினம் (01) இதுவரை 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் நால்வர் பங்களாதேஷ் இல் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், ஒருவர் இந்தோனேசியா மற்றுமொருவர் பெலரூஸ் இலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், இருவர் கடற்படை வீரர்கள் எனவும் தெரிய வருகிறது.

மேலும் இருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரின் அருகில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.