இலங்கையில் நேற்றைய தினம் (15) இதுவரை 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1905 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் 06 பேர் மாலைதீவில் இருந்தும், 05 பேர் பங்களாதேஷ் இல் இருந்தும், ஒருவர் குவைத்தில் இருந்தும், மற்றுமொருவர் லாஹூரிலிருந்தும் வருகை தந்தவர்கள் என்றும் 03 பேர் கடற்படை வீரர்கள் எனவும் தெரியவருகிறது.


Blogger இயக்குவது.