இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1656 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (02) 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் 07 பேர் கடற்படை வீரர்கள் எனவும், ஒருவர் தொற்றுக்கு உள்ளான கடற்படை வீரருக்கு அருகில் இருந்தவர் எனவும் தெரிய வருகிறது.

மேலும் ஒருவர் டுபாயிலிருந்தும் மற்றுமொருவர் ரஷ்யாவிலிருந்தும் இறுதியாக தொற்று இனங்காணப்பட்ட மூவர் குவைத்தில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என்று தெரிய வருகிறது.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.