இங்கிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் ரிடிங் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் மையப்பகுதியில் பார்பெரி என்ற பூங்கா அமைந்துள்ளது.

இந்த பூங்காவில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பொழுதை கழிப்பது வழக்கம். 

இந்நிலையில், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பூங்காவில் அமர்ந்தும், விளையாடியும், ஓய்வு எடுத்தும் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 25 வயது நிரம்பிய நபரொருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பூங்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவர்களை கண்மூடித்தனாக குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினான். 

இதனால், அந்த பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

அப்போது அந்த நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.

இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.