ஜப்பான் அமாமி தீவு பகுதியில் கடந்த 18ம் திகதி மாலை அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் அந்த தீவின் வட கிழக்கு பகுதியில் தொடர் மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த கப்பல் நேற்று காலையில் யோகோயேட்-ஜிமா தீவின் மேற்கு பகுதியை நோக்கி நகர்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கப்பலை கண்காணித்து, அது குறித்த தகவல்களை சேகரிக்குமாறு இராணுவத்துக்கு ஜப்பான் இராணுவ மந்திரி டாரோ கோனோ உத்தரவிட்டுள்ளார்.

உடனே ஒரு கவாசாகி ரோந்து விமானம், லாக்ஹீட்-3 நீர்மூழ்கி கப்பல் தடுப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு விமானம், 3 ரோந்து கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.