யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்

தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே கைதுப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்முனை தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் இன்று (19) மாலையில் இடம் பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வடமராச்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரான கே.கமலராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைத்துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.