ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (17) இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் நடவடிக்கை தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையில் இடம்பெறவுள்ள முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.
Blogger இயக்குவது.