பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை (NAITA) தயாராகி வருகிறது.
இதற்காக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இணைத்துக் கொள்ளப்படும் இளைஞர் – யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க : http://naita.gov.lk/
கருத்துரையிடுக