பலவந்தமாக கசிப்பை புகட்டியதால் 8 வயது பிள்ளையொன்று ஹல்தும்முல்ல மாவட்ட வைத்தியசாலையில் இன்று (22) அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹல்தும்முல்ல- நீட்வூட் தோட்டத்தைச் சேர்ந்த இந்தப் பிள்ளையின் தாய் வெளிநாட்டில் வசிப்பதுடன், தந்தை போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிள்ளையின் மாமா உறவு முறையான ஒருவரைக் கைதுசெய்வதற்காக  விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.