சிறைக் கைதிகள் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை சிறைச்சாலையிலுள்ள 11 கைதிகளும் பல்லேகல சிறைச்சாலையிலுள்ள 7 கைதிகளும் நேற்றிரவு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.