முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

தேர்தலின் போது விசாரணைகள் தொடங்கப்படுகின்றன, அதற்கான காரணங்கள் குறித்து சந்தேகம் உள்ளது. எனவே வாக்கெடுப்பு முடியும் வரை விசாரணையை ஒத்திவைக்க ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது என அதன் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் கூறியுள்ளார்.

தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நீண்ட காலமாக விசாரணைகளில் இருந்த முக்கிய வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.தேர்தல் செயல்முறைகளில் இந்த விசாரணைகளின் தலையீட்டை உணர்ந்து, தேர்தல் முடிவடையும் வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான விசாரணையில் ஏன் திடீர் ஆர்வம் காட்டுகின்றனர். தேர்தல் நடைபெற 2 வாரங்களே உள்ள நிலையில் 15 மாதங்களுக்குப் பின்னர் ஏன் இந்த விசாரணை தொடங்கப்படுகிறது. 15 மாதங்கள் காத்திருந்த பொலிஸாரால் ஏன் இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.  

ஜூலை 17ம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அனைவரும் வரவேற்றிருந்தனர். பொதுத்தேர்தல் முடியும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.